Monday 6th of May 2024 02:34:32 AM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியாவில் 12 பேருக்கு தொற்று: திருகோணமலை தொற்றாளர் மூலம் 9 பேர் தொற்றுக்குள்ளாகினர்!

வவுனியாவில் 12 பேருக்கு தொற்று: திருகோணமலை தொற்றாளர் மூலம் 9 பேர் தொற்றுக்குள்ளாகினர்!


புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக திருகோணமலையில் இருந்து வவுனியா வந்து திரும்பிய ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பின்னணியில் வவுனியாவில் இரு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் தொற்றுக்குள்ளாகிய சம்பவம் பதிவாகியுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா கற்பகபுரம் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கும், சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து வருகைதந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சித்திரை வருடப்பிறப்பினை கொண்டாடுவதற்காக திருகோணமலையில் இருந்து வவுனியா கற்பகபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகைதந்த நபர் ஒருவருக்கு, திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் வருகைதந்த வவுனியா கற்பகபுரம் பகுதியில் உள்ள சிலருக்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது.

அதற்கமைய அவர் தொடர்புட்டிருந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 9 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அத்துடன் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து வருகைதந்த இருவரும் என 12 பேர் சமூகத்தில் இருந்து தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் தெரிவித்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், திருகோணமலை, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE